ஏதேனும் ஒரு செயல் ஆக்க பூர்வமாக அமையும் எனில் அது உழைப்பு.
உழைப்பு அதன் செயலை கொண்டு வேறுப்படுகிறது; இதை உடலுக்கு உழைப்பு, சிந்தைக்கு
உழைப்பு என இரு பெரும் பிரிவாக பிரிக்கலாம்.
விவசாயி, ஆசாரி, கொத்தனார், நெசவன், குழி தொண்டுபவன், மரம் வெட்டுபவன்,
கூலி இவர்களை சுருக்கமாக பாட்டாளி என்பர். இவர்களது உழைப்பு உடல் சார்ந்தது
(சிந்திப்பதை விட செயல் அதிகம்). இவர்களில் படித்தவர்கள் குறைவுதான். போதிய
செல்வம் இல்லா விட்டாலும், தன் கடின உழைப்பால் ஆறோக்கியம் மிக்க வாழ்வு
வாழ்பவர்கள். ஏழ்மை இவர்களது சொத்து.
இவர்களது உழைப்பு
“விடியும் வரை விடியலை தேடும்
போராட்டம்
குபேரன் ஆக அல்ல பசியை
போக்க
-
பாட்டாளிகள்
பாட்டாளிகள் உடல்
உழைப்பாளர்கள் என்றால், சிந்தை உழைப்பவர்கள் யார்..?
கணக்கு பிள்ளை, மருத்துவர், ஆசிரியர், ஓவியர், கவிஞர், எழுத்தாளர்
இப்படி கல்வியில் கரை ஏறியோரின் பட்டியல் தான் சிந்தையால் உழைப்பவர்கள். இவர்களது
கல்வியால் பாட்டாளிகளை விட பல மடங்கு செல்வத்திற்கு சொந்தகாரர்கள் மற்றும் மதிக்க
தக்கவர்களும் ஆவர். உடல் உழைப்பின்மையால் பல வகை வியாதி இவர்ககது சொத்து,
இவர்களது உழைப்பு
“குபேரன் ஆனாலும் பல மைல்
ஓட்டம்
பயனிக்க அல்ல உடல் பருமன்
இழைக்க
-
பட்டதாரிகள்
நம் தேசம், உடல்
உழைப்பவர்களை மதிப்பதில்லை. அது சேரி; சிவன் பிள்ளைகளில் சிந்தித்தவனுக்கு தானே ஞான பழம்
கிடைத்தது.







